Investment ideas to make money over 55! 
பொருளாதாரம்

55 வயதுக்கு மேல் பணம் சம்பாதிக்க சில முதலீட்டு யோசனைகள்! 

கிரி கணபதி

55 வயதிற்கு மேல், ஓய்வு பெறும் காலம் நெருங்கி வரும் நிலையில், பணம் சம்பாதிப்பது மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது. உங்களிடம் ஓய்வு காலத்திற்கு போதுமான சேமிப்பு இருந்தாலும், பணவீக்கம் மற்றும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கூடுதல் வருமானம் தேவைப்படலாம். எனவே, இந்தப் பதிவில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணம் சம்பாதிக்க உதவும் சில முதலீட்டு யோசனைகள் பற்றி ஆராய்வோம். 

பங்குகள்: முதலீடு என்றதும் முதலில் ஞாபகத்திற்கு வருவது பங்குகள்தான். இவை நீண்ட காலத்திற்கு பணத்தை பெருக்குவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. 55 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற சில காலம் இருப்பதால், பங்குகளில் முதலீடு செய்வது லாபகரமானதாகவே இருக்கும். இருப்பினும் இதில் ஆபத்து அதிகம் இருப்பதால், இதைப் பற்றி முழுதாகத் தெரியாமல் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். 

மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு வகையான முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் பணத்தை வழங்குகின்றன. 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களது ஓய்வூதிய காலம் நெருங்கி வரும் போது, குறைந்த ஆபத்துடன் கூடிய மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடியும். இதிலும் ஓரளவுக்கு ரிஸ்க் இருப்பதால், முறையாகத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது நல்லது. 

நிலையான வருமான முதலீடுகள்: நிலையான வருமான முதலீடுகள், கடன் பத்திரங்கள் மற்றும் டெபாசிட் சான்றிதழ்கள் போன்றவை வழக்கமான வருமானத்தை வழங்குகின்றன. இவற்றில் முதலீடு செய்வது, ஓய்வூதிய காலத்தில் நிலையான வருமானத்தைப் பெற உதவியாக இருக்கும். 

தொழில் தொடங்குதல்: 55 வயதிற்கு மேல் ஓரளவுக்கு பணத்தை நீங்கள் சேமித்து வைத்திருப்பீர்கள். அதைப் பயன்படுத்தி சந்தையை ஆராய்ந்து ஒரு நல்ல தொழில் தொடங்கலாம். முடிந்தவரை உங்களுக்கு ஆர்வம் மற்றும் அனுபவம் நிறைந்த துறையில் தொழிலைத் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்க விருப்பமில்லை எனில், ஓய்வு நேரத்தில் பகுதி நேரமாக ஏதேனும் வேலை செய்யலாம். 

வீட்டை வாடகைக்கு விடுதல்: வீட்டை வாடகைக்கு விடுவது 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எளிதான ஒரு பணம் சம்பாதிக்கும் யுக்தி ஆகும். தங்களது வீட்டையோ அல்லது அதில் ஒரு பகுதியையோ வாடகைக்கு விட்டு கூடுதல் வருமானம் பெற முடியும். 

முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை: 

முதலீடு செய்வதற்கு முன் உங்களது முதலீட்டு இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எதற்காக பணத்தை சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து முதலீடு செய்வது உங்களது இலக்கை வெற்றிகரமாக அடைய உதவும். அதே நேரம் ஒருவேளை நீங்கள் முதலீடு செய்யும் பணம் நஷ்டம் அடைந்தால் அதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் பார்க்கவும். உங்களது சக்திக்கு மீறிய பணத்தை ஒருபோதும் முதலீடு செய்ய வேண்டாம். 

முதலீடு செய்யும்போது அவற்றை பல்வேறு வகையான சொத்துக்களில் பரவலாக்கத் தவறாதீர்கள். அப்போதுதான் ஒரு விஷயத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் மற்றொன்று உங்களை காப்பாற்றும். இவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல தெளிவுடன் பணத்தை முதலீடு செய்வது நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் என்றுமே பிறர் சொல்வதை அப்படியே கேட்கக்கூடாது. நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் துறைகளைப் பற்றி நன்கு அலசி ஆராய்ந்து, ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்ட பிறகு முதலீடு செய்ய வேண்டும். 

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT