Baakiyalakshmi  
சின்னத்திரை / OTT

நாளை 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்... கோபி Vs பாக்கியா... ஜெயிக்க போவது யார்?

விஜி

பாக்கியலட்சுமி சீரியல் ஞாயிற்றுக்கிழமையான நாளை 2 மணி நேரம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார். போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். தொடர்ந்து நேற்று கோர்ட்டில் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் சாட்சிகள் அனைத்தும் ஈஸ்வரிக்கு எதிராக திரும்ப கடைசி நேரத்தில் பாக்கியா மயூவை அழைத்து வந்து சாட்சி சொல்ல சொன்னார். அதில் ஈஸ்வரி நிரபராதி என நிரூபணமானதால் அவரை கோர்ட் ரிலீஸ் செய்தது. தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் நடந்த விஷயத்தை மயூவிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார் ராதிகா. மேலும் கமலாவை திட்டி தீர்க்கிறார். என்னை எல்லாரும் அசிங்க படுத்துறீங்களா என்று. தொடர்ந்து அம்மாவை பாக்க போன கோபிக்கு அசிங்கமே மிஞ்சியது. கடுப்பான ஈஸ்வரி கோபியை தலைமுழுகிவிட்டார்.

இந்த நிலையில், வெளியான புரோமோவில், நாளை ஞாயிற்றுக்கிழமை பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து 2 மணி நேரம் ஒளிபரப்பப்படுவதாகவும், அதில் கோபி, பாக்கியா சமையல் போட்டியில் களமிறங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதும் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 30 நிமிடம் மட்டுமே சீரியல் ஒளிபரப்பாகும் நிலையில், டிஆர்பியை எகிற வைக்க விஜய் டிவி ஸ்பெஷலாக இதை ஒளிபரப்புகிறது. கோபி தனது தாயிடம் வெற்றி பெற வேண்டும் என ஆசிர்வாதம் பெறுகிறார். அதற்கு ஈஸ்வரி போட்டியில் பாக்கியா தான் வெற்றி பெறுவார் என கூறுகிறார். இந்த புரோமோ காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், நாளை பாக்கியலட்சுமி பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு உள்ளது என்பது தெரிகிறது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT