சின்னத்திரை / OTT

பிரபல சீரியல் நடிகர் மீது பாய்ந்த புகார்.. முன் ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றம்!

விஜி

சின்னத்திரை மூலமாக பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையிலும் துணை நடிகராக இருப்பவர் ராகுல் ரவி. அதாவது தமிழில் முதல்முறையாக நந்தினி என்ற சீரியல் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் ராகுல் ரவி. 

கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்தவர். அதற்குப் பிறகு இவருக்கு கிடைத்த சின்னத்திரை வாய்ப்புகளால் மலையாளத்தில் வெளியான பொன்னம்பளி என்ற சீரியலில் முதல் முறையாக தனது சின்னத்திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மற்றும் கன்னடம் என்ற இரண்டு மொழிகளில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியல் மூலமாக மிகவும் பிரபலமடைந்தார்.

இதற்கிடையே வெள்ளி திரையிலும் துணை நடிகராக வலம் வந்தார். இப்படி தனது திரை வாழ்க்கையில் புகழை நோக்கி சென்று கொண்டிருந்த ராகுல் ரவி தனது காதலியான லட்சுமி நாயரை கடந்த 2020இல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.

ராகுல் ரவியின் மனைவி லட்சுமி நாயர் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதுவும் அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்டால் அவர் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார்.

ராகுல் ரவியின் மனைவி லட்சுமி நாயர்

தொடர்ந்து காவல்துறையினரை தான் வசிக்கும் இடத்திற்கு அழைத்து சென்று தனது கணவர் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டினார் லட்சுமி நாயர்.  இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். அதற்கு முன்பாகவே ராகுல் ரவி இவ்வழக்கில் இருந்து வெளிவதற்கு முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். அந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்யததை அடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். இருப்பினும் அவரைக் கண்டதும் பிடிக்க வேண்டும் என்ற வகையில் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீசை அனுப்பியது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்தபடியே  நடிகர் ராகுல் ரவி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  ராகுல் ரவியின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT