வெள்ளித்திரை

அருள்நிதி நடிப்பில் ‘திருவின் குரல்’ : மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்!

கல்கி டெஸ்க்

அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘திருவின் குரல்’. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘திருவின் குரல்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து முன்னணி இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹரீஷ் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ராராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம் உள்ளிட்டபலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மெடிக்கல் க்ரைம் த்ரில்லரை அடிப்படையாக கொண்ட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் மிக வித்தியாசமாகவும், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘டி பிளாக்’, ‘தேஜாவு’, ‘டைரி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘டிமான்டி காலனி 2’ படத்தில் நடித்து வருகிறார்.

‘திருவின் குரல்’ படத்தின் வாய் பேச முடியாத, செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அருள்நிதி. மொத்தப் படமும் மெடிக்கல் க்ரைமை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. கத்தி, ரத்தம், சண்டை, மருத்துவமனை என விறுவிறுப்பாக நகரும் அழுத்தமான காட்சிகள் படத்தின் மீதான

எதிர்பார்ப்பினை கூட்டுகின்றன. ‘திருவின் குரல்’ திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

உலகின் ஒரே கொதிக்கும் நதி எது தெரியுமா?

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

சிறுகதை - ஸ்கூட்டர் ராணி!

SCROLL FOR NEXT