Mari selvaraj and Co team 
வெள்ளித்திரை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பாரதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் தென்னிந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கும்படிச் செய்தது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய இப்படம், ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் தனுஷை கதாநாயகனாக வைத்து கர்ணன் படம் இயக்கினார். இப்படமும் தமிழக ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப்பெற்றது. அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னன் படம், மாரி செல்வராஜ் இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும்.

இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. மாரி செல்வராஜ், தான் இயக்கிய மூன்று படங்களிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். அந்தவகையில், தற்போது இவர்கள் இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்தைப் பற்றிய தகவல் சென்ற ஆண்டே இணையத்தில் கசிந்தது. துருவ் விக்ரம் அதற்காக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இதனையடுத்து மாரி செல்வராஜ் மற்றும் துருவ் ஆகியோர் இணையும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், இன்று காலை படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்தது. பா.இரஞ்சித் மற்றும் அப்லாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் அனுபமா பரமேஷ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கலையரசன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி ஆகியோரும் நடிக்கவுள்ளனர். 

இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கைப் பற்றிய உண்மைக் கதையைத் தழுவி உருவாகும் படமாகும். இன்று இப்படத்தின் தலைப்பு, First லுக்குடன் வெளியாகும் என கடந்த இரண்டு நாட்களாகவே கூறப்பட்டு வந்தது. அதன்படி, தற்போது இப்படத்திற்கான First லுக் வெளிவந்துள்ளது. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு, பைசன் என தலைப்பு வைத்துள்ளனர். 

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT