Naataamai movie 
வெள்ளித்திரை

நாட்டாமை படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! 30 வருடம் கழித்து மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!

விஜி

நாட்டாமை படத்தில் நடிகை குஷ்புவுக்கு முன்பு, நடிக்க இருந்த நடிகை யார் என்கிற தகவலை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா, விக்ரமன், இராம் தாஸ், நாகேஷ், ராமராஜன், கே ரங்கராஜ், போன்ற பல இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர், 'புரியாத புதிர்' திரைப்படத்தின் மூலம் 1990 ஆம் ஆண்டு, இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ் ரவிக்குமார். முதல் படத்திலேயே சுவாரஸ்யமான கதைக்களத்தால், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கே.எஸ் ரவிக்குமார், இதைத்தொடர்ந்து சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், சக்திவேல், போன்ற பல படங்களை இயக்கினார். அதைப்போல் தற்போது வரை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து, படையப்பா, போன்ற படங்களையும் இயக்கிய பெருமை இவரையே சேரும்.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் என பல நடிகர்களை வைத்து இயக்கியுள்ள கே.எஸ் ரவிக்குமார், திரைப்பட இயக்கத்தை தாண்டி ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர்.

இவர் இயக்கத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை. இப்படம் சிறந்த படத்திற்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதையும், சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதையும் பெற்றது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில் , குஷ்பூ, மீனா, ராஜா ரவிந்த்ரா, சங்கவி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், பொன்னம்பலம், பாண்டு, வினு சக்கரவர்த்தி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தற்போது இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி உள்ள இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், குஷ்பூ நடித்திருந்த லட்சுமி என்கிற வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர், மூத்த நடிகையான நடிகை லட்சுமி தானாம். ஆனால் அப்போது ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, அதன் பின்னரே குஷ்புவை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்பு வெளியாகி வைரலாகி வருகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT