Feb 14 valentine's day
Feb 14 valentine's day 
வெள்ளித்திரை

பிப் 14 காதலர் தினம் ஸ்பெஷல்: நாயகிகளின் நிஜ ஹீரோவாக மாறிய இயக்குநர்கள் யார் தெரியுமா?

ராகவ்குமார்

நடிகர்கள் மட்டுமில்லாது சில இயக்குநர்களின் காதல் பக்கங்களும் சுவாரசியமானது. டைரக்டர் -ஹீரோயின் காதலை பற்றி இங்கே காண்போம்

தேவயானி -ராஜகுமாரன்:

ஒரு கதாநாயகியை ஒரு சராசரி இளைஞன் காதலிக்கும் கதயை தேவயானியை வைத்து ராஜகுமாரன் இயக்கிய போது பலருக்கு தெரியாது ராஜகுமாரன் தேவயானியின் மீது உள்ள காதலைத்தான் படமாக எடுத்து கொண்டிருக்கிறார் என்று. விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தேவயானி ,பெற்றோர் எதிப்பை மீறி ,வீட்டுக்கு தெரியாமல் சுவர் ஏறி குதித்து காதலித்த ராஜகுமாரனை கரம் பிடித்தார் . தனது காதல் கணவருக்காக சொந்தபடம் தயாரித்து கையை சுட்டு கொண்டார். பல வருடங்கள் கழித் து கோலங்கள் தொடரில் ரீ என்ட்ரி தந்து மக்களின் அன்பை பெற்று குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ்கிறார் .

Actress devayani family photo

குஷ்பு -சுந்தர் C:

தமிழ் நாட்டு ரசிகர்கள் மனதில் கோவில் காட்டும் அளவிற்கு புகழ் பெற்று இருந்தவர் குஷ்பு . இந்த குஷ் புவுவையே காதலித்து கட்டிக் கொண்டவர்சுந்தர் C.1995 ஆம் ஆண்டு தனிப்பட்ட வாழ்க் கையில் பிரச்சனைகள் ,சோகம் போன்றவைகளால் பாதித்திருந்த குஷ்புவிற்கு முறை மாமன் படப்பிடிப்பில் ஆறுதலாக இருந்தார் இப்படத்தின் சுந்தர் C .இந்த ஆறுதல் காதலாக மாறியது. ஐந்தாண்டுகள் காதலித்து வந்தவர்கள் 2000 ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள் . திருமணத்திற்கு பின் சுந்தர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் .

Actress Kushbu family photo

குஷ்பூ அரசியலில் வலம் வருகிறார் இருவரும் தங்களது மகள்களின் பெயரால் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார்கள் .காதலில் உண்மையான நேசிப்பிற்க்கும் , வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார்ர்கள் இந்த ஜோடிகள்

ரோஜா -RK செல்வமணி:

எத்தனை அவமானங்கள் வந்தாலும் உறுதியாக இருந்தால் காதலில் வெற்றி பெற முடியும் என்பதற்கு RK செல்வமணி _ரோஜா தம்பதிகள் தமிழ் சினிமாவில் சிறந்த உதாரணமாக சொல்லலாம். 1992 ஆம் ஆண்டு ரோஜாவை தனது செம்பருத்தி படத்தில் அறிமுகம் செய்தார் செல்வமணி. அறிமுகம் செய்த போதே காதல் மலர்ந்ததால் ,செம்பருத்திக்கு பிறகு தான் இயக்கிய அனைத்து படத்திலும் ரோஜாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார்.

Actress roja family photo

சில சொந்த பட முயற்சியில் கடனாளியான் ரோஜா பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றார் . பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து காதலில் உறுதியாக இருந்து 2002 ஆம் ஆண்டு செல்வமணி ரோஜா திருமண வாழ்வில் நுழைந்தார்கள் . ரோஜா ஆந்திர அரசியலில் ஈடுபட்டு இன்று ஆந்திர அமைச்சரவையில் உள்ளார்.

வாசனைகளின் சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

சிலந்திகளும் கரையான்களும் வாழும் இடமானது இது!

கேரளாவின் சுவை மிகுந்த இரண்டு தீயல் வகைகள்!

வீட்டுக்கு அழகு சேர்க்கும் போன்சாய் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு!

பால் Vs தயிர்: குடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT