வெள்ளித்திரை

கார்த்தி, அஜித்தை வைத்து இயக்கிய ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்! ரசிகர்களே எதிர்பார்க்காத திருப்புமுனை!

மணிகண்டன்

கோலிவுட்டில் 2014ல் 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். இவர் தற்போது காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்க புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், முதலில் வெளியான 'சதுரங்க வேட்டை' ரசிகர்களிடையே பெரும் வெற்றிபெற்றதையடுத்து, அடுத்து 2017ல் நடிகர் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார். அது கோலிவுட்டில் தனிமுத்திரை பதித்த படமாக ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

அடுத்து வரிசையாக தல அஜித்தை வைத்து, 2019ல் 'நேர்கொண்ட பார்வை', 2022ல் 'வலிமை' இயக்கினார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது வரும் பொங்கலன்று இவரது இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து ஆக்ஷன் கலந்த அதிரடி திரைப்படத்தை இயக்கிவரும் ஹெச்.வினோத், அடுத்து நடிகர் யோகி பாபுவை வைத்து இயக்கவுள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளளது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "தான் சமீபத்தில் நடிகர் யோகி பாபுவிடம் ஒரு கதையைக் கூறியுள்ளதாகவும், அதில் நடிகர் யோகி பாபுதான் கதாநாயகன் என்றும், அந்தப் படம்தான் தன்னுடைய அடுத்த படமா என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அப்பாவி திருடனையும், நேர்மையான போலீஸ் அதிகாரியையும் மையப்படுத்திதான் அப்படத்தின் கதை அமையும் எனவும் கூறியுள்ளார் ஹெச்.வினோத்.

ஏற்கெனவே, உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு தகவலும் வெளியாகியிருந்த நிலையில், அப்படம் குறித்து உறுதியான அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்ககது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT