வெள்ளித்திரை

இமயமலையில் ஜோதிகா: வைரலாகும் வீடியோ!

கல்கி

சமீபத்தில் ஜோதிகா இமயமலைக்கு நண்பர்கள் சிலருடன் டிரக்கிங் சென்ற நிலையில், இமயமலையில் கையில் தேசியக் கொடியுடன் போஸ் கொடுத்து எடுத்த ஃபோட்டோவை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஜோதிகா கடந்த 3- ம் தேதிதான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். தனது முதல் பதிவாக கணவர் அல்லது குடும்பத்துடன் எடுத்த போட்டோ அல்லது தனது புதிய படத்தின் ஸ்டில்கள் ஏதாவது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோதிகா, இமயமலையில் கையில் தேசியக் கொடியுடன் போஸ் கொடுத்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த உடனே அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டி விட்டது. சூர்யாவும் ஜோதிகாவை இன்ஸ்டாகிராமிற்கு வரவேற்று,'' என் பொண்டாட்டி ரொம்ப ஸ்டிராங்'' என கருத்து பதிவிட்டிருந்தார்.

இமயமலையில் டிரக்கிங் சென்றது, அங்கு அவர் பார்த்த இடங்கள், அவற்றின் அழகு ஆகியவற்றை வீடியோவாக பதிவிட்டுள்ளார் ''கன்னத்தில் முத்தமிட்டால்'' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய ''வெள்ளை பூக்கள் மலரட்டுமே'' பாடலை இந்த வீடியோவில் ஜோதிகா இணைத்திருப்பது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மனதிற்கு இதமான இந்த பாடலுடன் ஜோதிகா பகிர்ந்த இமயமலையின் அழகை ரசிக்கும் போது, பார்ப்பவர்களே இமயமலைக்கு சென்ற உணர்வு வருகிறது. அந்தவகையில் ஜோதிகாவின் இந்த வீடியோ தாறுமாறாக வைரலாகி இதுவரை 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. இதோ.. அந்த வீடியோ..

சந்திரயான் 3 விண்கலத்தின் இரண்டு முக்கிய தகவல்கள் வெளியாகின!

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க போலீஸ்காரர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட்!

கோடைகாலத்தில் முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் வழிமுறைகள்!

விதியை நிர்ணயிப்பது நமது கடமையே!

முன்பின் தெரியாதவர் கொடுக்கும் உணவை ஏன் உண்ணக்கூடாது தெரியுமா?

SCROLL FOR NEXT