வெள்ளித்திரை

“பேட்டரி” -யில் ஜி. வி பிரகாஷ்குமார்  பாடிய  பாடல்!

கல்கி
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் ' பேட்டரி ' படத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் குமார் பாடல் பாடியுள்ளார்.
பேட்டரி படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும்  தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும்  செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய அந்த பாடல்..
"நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே
என்னில் ஏதோ ஆனது நீதானே..
காதலே நீதானே..
பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா.."
– என்கிற இந்த பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி. வி. பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் பாடியிருக்கிறார்கள்.
மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின்  நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டது.
பேட்டரி மே மாதம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவிலேயே உயரமான ஸ்தூபி, 130 அடி உயர புத்தரின் சிலை உள்ள மைண்ட்ரோலிங் மடாலயம்!

வீட்டில் 'உருளி' வைக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இயற்கை எழில் கொஞ்சும் மாஞ்சோலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

தேன் உறிஞ்சும் விநாயகர் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்!

இனி எந்தத் துறையினர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினாலும் அபராதம்!

SCROLL FOR NEXT