வெள்ளித்திரை

காஜல் மகனுக்கு சிவனின் பெயர்!

மும்பை மீனலதா

ந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வால், திருமணமான பிறகும் திரைப்படங்கள், விளம்பரங்கள், வெப் தொடர்கள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்சமயம் தமிழில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். காஜல் அகர்வால் – கவுதம் கிட்ச்லு தம்பதிக்கு நீல் என்ற மகன் இருக்கிறார்.

இது குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி பின்வருமாறு:

சிவபக்தி எனக்கு அதிகமென்பதால் எப்போதும் சிவபெருமானை பயபக்தியுடன் வணங்கி வருகிறேன். சிவெபருமானின் பெயரையே என் மகனுக்கு சூட்ட முடிவு செய்கையில், அன்புக் கணவனர் கிட்ச்லு, நாமும் மற்றவர்களும் அழைப்பதற்கும், எழுதுவதற்கும் சுலபமாக இருக்கக்கூடிய ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து வைக்கலாமென்றார். அதனால் சிவபெருமானின் மற்றொரு பெயரான நீலகண்டன் என்பதிலுள்ள முதல் இரு எழுத்துக்களை எடுத்துக்கொண்டு ‘நீல்’ என்று என்மகனுக்கு பெயர் சூட்டினோம்.

சில நேரங்களில் படப்பிடிப்பிற்கும், ஜிம்மிற்கும் செல்கையில் அவனைப் பிரிந்திருப்பது கஷ்டமாக இருக்கிறது. நான் வீடு திரும்பிய பின், அவன் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தைக் கண்டு என் மனவேதனை பறந்துவிடும். குழந்தையின் முகத்தில் ஏற்படும் சிரிப்பு கொடுக்கும் மனநிம்மதியை விவரிக்க முடியாது.

முன்பெல்லாம், குழந்தையை வளர்க்கும் தாயை நான் காண்கையில் அற்புதமான உணர்வு ஏற்படும். இப்போது நானும் தாயாகி எங்கள் மகன் நீலை வளர்க்கையில் அதே உணர்வு ஏற்படுகிறது.

தீபிகா படுகோனின் ரகசியம்!

பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோன் தற்சமயம் ஹாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘பதான்’ வெற்றிப் படத்தில் நடித்தவர், தற்போது ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார்.

இதுநாள் வரை மறைத்து வைத்திருந்த ரகசியம் ஒன்றை இப்போது அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அது என்ன ரகசியம்? அவரே கூறுகிறார்.

“என்னை புகழ் பெற்ற நடிகையாகப் பார்த்துவரும் ரசிகர்களுக்கு, எனக்கு மிமிக்ரி செய்யும் திறமை இருப்பது தெரியாது. சினிமாவில் நடிக்க வருமுன், முன்னணி மிமிக்ரி கலைஞராக வரவேண்டுமென எண்ணினேன். ஆனால் மேடைகளில் மக்கள் முன்பு செய்வதற்கான துணிச்சல் இல்லாததால் மறைத்துவிட்டேன். வீட்டில் தனிமையில் இருக்கையில் மிமிக்ரியை ப்ராக்டீஸ் செய்து, அத் திறமையை மேலும் வளர்த்து வருகிறேன். எனது கணவர் ரன்வீர் சிங் மற்றும் என்னுடைய சகோதரி இவர்கள் எனது மிமிக்ரியைக் கண்டிருக்கிறார்கள். தற்சமயம் ரன்வீர் சிங் மாதிரி மிமிக்ரி செய்ய பயிற்சி எடுத்து வருகிறேன்” என்பதாகும்.

இரவில் ஒளிரும் அதிசயத் தாவரங்கள்!

Brazilian Treehopper: மண்டை மேல கொண்டை வச்சிருக்கானே எவன்டா இவன்? 

ஏர்ல் கிரேய் டீயிலிருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

எமனை உயிர்ப்பிக்க பூமாதேவி வழிபட்ட தலம் எது தெரியுமா?

Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 

SCROLL FOR NEXT