வெள்ளித்திரை

முதன்முதலாக சம்பளம் வாங்காமல் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய்!

மணிகண்டன்

கோலிவுட்டில் நம்பர் ஒன் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பொங்கலன்று 'வாரிசு' திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், தளபதி விஜய் முதன்முறையாக சம்பளம் வாங்காமல் பிசினஸ் வசூலில் ஷேர் முறையில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தில் ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் வெளியாகும் 'வாரிசு' திரைப்படம் எமோஷனல், சென்டிமெண்ட் கலந்த ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இவரது இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 2வது படம் 'தளபதி 67' ஆகும்.

லோகேஷ் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், நிவின் பாலி, திரிஷா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் கமல்-சூர்யா இருவரும் கேமியோ ராேல் செய்ய வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசு பரவி வருகிறது.

விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகர் விஜய், ரூ. 125 கோடி வரையிலும் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'தளபதி 67' படத்தில் நடிக்க, நடிகர் விஜய் சம்பளமாக எதுவும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக படத்தின் பிசினஸ் வசூலில் தனக்கும் ஷேர் கேட்டுள்ளதாக தகவல்கள் அறியப்படுகிறது. முதல்தடவையாக, 'தளபதி 67' படத்திற்காகத்தான் விஜய் இப்படி செய்துள்ளார்.

இதுபோன்ற சம்பள விஷயத்தில், முன்னதாக ரஜினிகாந்த் 'சிவாஜி' படத்தின்போது சம்பளமாக ரூ.1000 மட்டுமே பெற்றுக்கொண்டு, படத்தின் பிசினஸ் வசூலில் ஷேர் பெற்றுக்கொண்டதும் குறிப்படத்தக்கது.

வித்தியாசமான சிறுநீரகம் கொண்ட விலங்கு எது தெரியுமா?

லாமினேட் செய்யப்பட்ட மரத்தரை தளத்தின் 7 பயன்கள் தெரியுமா?

கோடைகாலமும், கொரியப் பெண்களின் சரும பராமரிப்பு முறைகளும்! 

கோதுமையை Pregnancy Tester ஆக பயன்படுத்திய பண்டைய எகிப்து பெண்கள்!

சிறுகதை - உண்மைகள் உறங்கட்டும்!

SCROLL FOR NEXT