Cassowary: The most dangerous bird in the world. 
பசுமை / சுற்றுச்சூழல்

Cassowary: உலகின் மிக ஆபத்தான பறவை.. ஓங்கி ஒதச்சா ஒன்றரை டன் வெயிட்! 

கிரி கணபதி

இயற்கை அதன் அதிசயிக்க வைக்கும் படைப்புகளால் நம்மை ஈர்க்கத் தவறியதில்லை. நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பல அற்புத படைப்புகள் இந்த பூமியில் இருக்கின்றன. அத்தகைய படைப்புகளில் ஒன்றுதான் Cassowary என்ற பறவை. அற்புதமான தோற்றம் மற்றும் வலிமையான நடத்தை ஆகியவற்றால் அறியப்பட்ட காசோவரி, உலகின் மிகவும் ஆபத்தான பறவை என்ற பட்டத்துடன் வலம் வருகிறது. இந்தப் பதிவில் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

Cassowary பறவைகள்: ஆஸ்திரேலியா மற்றும் பாப்புவா நியூ கினியாவின் மழைக்காடுகளைப் பூர்வீகமாக கொண்ட காசோவரி, பறக்க முடியாத பறவை இனமாகும். இது நெருப்புக் கோழிகள் மற்றும் ஈமு கோழிகள் உள்ளடக்கிய ரேட் குடும்பத்தைச் சேர்ந்தது. சராசரியாக 5 முதல் 6 அடி உயரத்திலும், 60 கிலோ எடை வரையிலும் வளரும் இந்த பறவைகள் உண்மையிலேயே அற்புதமான உயிரினமாகும். இதன் தோற்றமே நமக்கு நடுக்கத்தை ஏற்படுத்த போதுமானது. இதன் சக்தி வாய்ந்த கால்கள் மற்றும் கூர்மையான கத்தி போன்ற நகங்கள் உலகின் ஆபத்தான பறவை என்ற பெயருக்கு ஏற்ற வகையில் உள்ளன. 

ஓங்கி ஒதச்சா ஒன்றரை டன் வெயிட்: காசோவரி பறவைகள் பறக்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றின் அசாதாரண உதைக்கும் திறன் எதிரிகளிடமிருந்து இவற்றைப் பாதுகாக்கிறது. சுறுசுறுப்பாக இருக்கும் இதன் வலிமைமிக்க கால்கள் ஒரே உதையில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும். சில இடங்களில் இந்தப் பறவைகள் மனிதர்களையே தாக்கி இருப்பதாக அறிக்கைகள் சொல்கிறது. இதனால் ஆழமான காயம் மற்றும் எலும்புகள் உடைந்த நிகழ்வுகளும் உள்ளனவாம். 

இயல்பு: காசோவரி, இயல்பாகவே ஆக்கிரமிப்பு தன்மையை கொண்டதாகும். அதாவது அதனுடைய எல்லைக்குள் எந்த அச்சுறுத்தும் விஷயங்களும் நுழையக்கூடாது. மீறி நுழைந்தால், தைரியமாக எதிர்த்துப் போராடும் குணம் கொண்டதாகும். அவற்றுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் தற்காப்புக்காக, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும். எனவே இந்தப் பறவைகளிடம் மனிதர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். 

உணவு: உலகிலேயே மிகவும் ஆபத்தான பறவை என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், இதன் முதன்மை உணவாக பழங்கள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளே உள்ளன. இதன் வலிமையான செரிமான அமைப்பு, தீங்கு விளைவிக்கும் நச்சுப் பழங்களையும் செரிமானம் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாகும். இந்த பறவைகள் பெரும்பாலும் நிலத்திலேயே வாழ்வதால், நிலப்பரப்புகளில் விதைப் பரவலுக்கு அதிகம் பங்களிக்கின்றன. இதனால் மழைக் காடுகள் எப்போதும் புத்துயிருடன் இருக்க உதவுகின்றன. 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT