Climate Change 
பசுமை / சுற்றுச்சூழல்

Climate Change: அவசர நடவடிக்கை வேண்டும்! இல்லையேல்? 

கிரி கணபதி

காலநிலை மாற்றம் என்பது இன்றைய நவீன காலத்தில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இது நமது எதிர்கால சந்ததியினருக்கு பெரும் விளைவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களின் மோசமான நடவடிக்கைகள், பெட்ரோல் டீசல் போன்ற புதைப்படிம எரிபொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் காடுகளை அழித்தல் போன்றவற்றால் பசுமை இல்ல வாயு வெளியேறி, உலக அளவில் வெப்பம் உயர்வதற்கு காரணமாகின்றன. எனவே காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்கவும், அனைவருக்கும் சரியான எதிர்காலத்தை உறுதி செய்யவும் அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. 

காலநிலை மாற்றத்தின் தாக்கம்: காலநிலை மாற்றத்தால் உலகில் பல்வேறு விதமான மோசமான விளைவுகள் தவிர்க்க முடியாததாக மாறி வருகின்றன. உயரும் வெப்பநிலை, உருகும் பனிக்கட்டிகள், தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவை காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சில பாதிப்புகளாகும். இத்தகைய மாற்றங்கள் பல்வேறு விதங்களில் நம்மையும், உலகில் வாழும் ஜீவராசிகளையும் அச்சுறுத்துகின்றன. எனவே இந்த மோசமான நிலைமையின் தீவிரத் தன்மையைப் புரிந்துகொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். 

கிரீன் ஹவுஸ் வாயுவைக் கட்டுப்படுத்த வேண்டும்: கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதால் பருவநிலை மாற்றத்தை பெருமளவில் குறைக்க முடியும். சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மூலமாக கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை நாம் குறைக்க முடியும். இதற்கு பொதுமக்களும், அரசாங்கமும், வணிக நிறுவனங்களும் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு மாறி கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் காடுகளை அழிக்காமல் பல்லுயிர் பெருகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

குறைந்த கார்பன் பொருளாதாரம்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி நாம் மாற வேண்டும். அதாவது பெட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் இயந்திரங்களுக்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் இயந்திரங்களை உருவாக்க வேண்டும். எனவே இத்தகைய விஷயங்களுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும். 

காலநிலை மாற்றம் சார்ந்த கல்வி மற்றும் விழிப்புணர்வு: பொதுமக்களிடையே காலநிலை மாற்றம் குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். காலநிலை மாற்றம் குறித்த விஷயங்களை பாடத்திட்டத்தில் இணைத்து அதன் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அரசாங்கங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு போதிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடத்தைகளில் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டுவர முடியும். 

காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது அதை ஏற்றுக் கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது. இதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான கட்டமைப்பு, பேரிடர் பாதுகாப்பு நிலை மற்றும் தகவமைப்பு போன்ற விஷயங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் பொதுமக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதையாவது அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். 

இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீள முடியும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT