உணவு / சமையல்

நட்ஸ் வடை!

பி.மஹதி


தேவை:
முந்திரி, பாதாம், பிஸ்தா  - தலா 50 கிராம்,
கடலைப் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - 1 கப்
வற  மிளகாய் - 3
உடைத்த உளுந்து - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
இஞ்சித் துருவல்  - 1 ஸ்பூன்.

செய்முறை:

முந்திரி, துவரம் பருப்பு, பாதாம், பிஸ்தா,  உடைத்த உளுந்து   மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஊறிய பிறகு, உப்பையும், காய்ந்த மிளகாயையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், கொத்தமல்லி, நறுக்கிய கறிவேப்பிலை,இஞ்சித் துருவல், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை இத்துடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.

பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுத்தால் சுவையான, சத்தான நட்ஸ் வடை தயார்.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT