Thakkali bath 
உணவு / சமையல்

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

கிரி கணபதி

தக்காளி பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் தமிழகத்தில் மிகவும் பிரபலமானவை. அதுவும் தக்காளி பாத் என்ற ஒரு உணவு அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். தக்காளி சேர்ப்பதால் கிடைக்கும் சிவப்பு நிறமும், மசாலாக்களால் உண்டாகும் நறுமணமும், சுவையும் இதனை தனித்துவமான உணவாக மாற்றுகிறது. தக்காளியின் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை அரிசியுடன் இணைந்து, தக்காளி பாத்திற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. இந்தப் பதிவில் முற்றிலும் வித்தியாசமான முறையில் தக்காளி பாத் எப்படி செய்வது என விரிவாகப் பார்க்கலாம்.‌ 

தக்காளி பாத் செய்யத் தேவையான பொருட்கள்: 

  • அரிசி: 1 கப் (பச்சரிசி)

  • தக்காளி: 3-4 (நடுத்தர அளவு)

  • வெங்காயம்: 1 (பெரியது)

  • பச்சை மிளகாய்: 2-3

  • இஞ்சி-பூண்டு பேஸ்ட்: 1 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை: சிறிதளவு

  • மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி

  • மிளகாய்த்தூள்: 1/2 - 1 தேக்கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)

  • கரம் மசாலா: 1/2 தேக்கரண்டி

  • உப்பு: தேவையான அளவு

  • எண்ணெய்: 2 தேக்கரண்டி

செய்முறை: 

தக்காளி பாத் செய்வதற்கு அரிசியை முதலில் நன்றாகக் கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.‌ பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர், அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். 

அடுத்ததாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்றாக வெந்து மசிந்து வரும் வரை வதக்கவும். இப்போது ஊறவைத்த அரிசி கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். இந்தக் கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூடி போட்டு 3 விசில் விடவும். 

இறுதியாக குக்கரில் காற்று போனதும், அதைத் திறந்து கொத்தமல்லித் தழை தூவி கிளறினால், வேற லெவல் சுவையில் தக்காளி பாத் தயார். இந்த சுவையான உணவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.‌

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? 

SCROLL FOR NEXT