Do you know what items are kept in the house for good luck?
Do you know what items are kept in the house for good luck? https://manithan.com
வீடு / குடும்பம்

அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

நான்சி மலர்

ம் வீட்டை அலங்கரிப்பதற்காகவும், அழகுக்காகவும் சில பொருட்களை வாங்கி வந்து வைத்திருப்போம். ஆனால், அந்தப் பொருட்களை வீட்டில் வைப்பதால் ஏற்படும் மற்ற பயன்களையும், நன்மைகளையும் பற்றி அறியாமலேயே இருப்போம். சில பொருட்கள் அழகு மற்றும் அதிர்ஷ்டத்தை தர கூடியது. அப்படிப்பட்ட பொருட்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

மூங்கில் மரம்: வீட்டில் மூங்கில் மரம் வைப்பது அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இதற்கு நெகிழ்வு தன்மை, அதிக வளர்ச்சி போன்ற குணங்கள் உள்ளதால், மூங்கில் மரத்தை வீட்டின் கிழக்கு பகுதியில் வைக்கும்போது, அது வீட்டிற்கு பாஸிட்டிவ் எனர்ஜியையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

சிரிக்கும் புத்தர் சிலை: சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் தென்கிழக்கில் வைக்கும்போது அதிர்ஷ்டம், அமைதி, வெற்றி, வளர்ச்சி போன்றவற்றை தரும் என்று நம்பப்படுகிறது.

டிரீம் கேட்சர்: படுக்கைக்கு மேல் வழக்கமாக வைக்கப்படும் இந்த டிரீம் கேட்சர் கெட்ட கனவுகள் வராமல் அமைதியான உறக்கத்திற்காக வைக்கப்படுவதாகும். டிரீம் கேட்சர் நல்ல கனவுகளையே பிடித்துக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, நல்ல உறக்கம் வேண்டுமெனில் வீட்டில் டிரீம் கேட்சரை வாங்கி வைத்துப் பாருங்கள்.

வாட்டர் பவுண்டெயின்: வீட்டில் தண்ணீர் ஊற்று வைப்பது பண வரவை அதிகரிக்கும். அப்படி உங்கள் வீட்டில் தண்ணீர் ஊற்று வைக்க இடமில்லையெனில் குறைந்தபட்சம் தண்ணீர் ஊற்று அல்லது அருவி இருப்பது போல படங்களை வைப்பது சிறந்ததாகும். இதுபோன்ற வாட்டர் பவுண்டெயினை வடக்கில் வைப்பதே நல்லதாகும்.

வாஸ்து மீன்கள்: வீட்டில் மீன்கள் வளர்ப்பது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. மீன்கள் நகர்ந்து கொண்டேயிருப்பது பண வரவை குறிக்கிறதாம். பணம், செல்வம், அதிர்ஷ்டம், வளர்ச்சி போன்றவை வரும் என்று நம்பப்படுகிறது. மீன் தொட்டியை தென்கிழக்கில் வைப்பதே சிறந்ததாகும்.

ஊதுபத்தி: வீட்டில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது நெகட்டிவ் எனர்ஜியை போக்கும் என்று நம்பப்படுகிறது. இதை பல காலங்களாக மசூதி மற்றும் கோயில்களில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது நல்ல நறுமணத்தை வீடு முழுக்க பரப்பி நல்ல மனநிலையை கொடுக்கும்.

யானை சிலை: யானை சிலைகள் வீட்டில் வைப்பதால் மென்மை, மகிழ்ச்சி, வலிமை, அதிஷ்டம் போன்றவற்றை உணர்த்துகிறது. அதுவும் யானை சிலையை ஜோடியாக வைப்பது இன்னும் மங்கலகரமாக கருதப்படுகிறது. கற்களால் செய்த யானை சிலையை வீட்டின் வாயிலில் வைப்பது அதிக நன்மையைத் தரும்.

செடிகள்: வீட்டில் செடிகள் வைப்பது மிகவும் நல்லதாகும். வீட்டில் துளசி வைப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் எல்லா வீடுகளிலும் துளசி செடியினை காண முடியும். இது பாஸிட்டிவ் எனர்ஜி, அமைதி மற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது.

வின்ட் சிம்ஸ்: வீட்டில் அமைதியான தருணத்தில் இந்த வின்ட் சிம்ஸிலிருந்து வரும் ஒலியை கேட்பதற்கு இதமாக இருக்கும் என்றே சொல்லலாம். வாஸ்துபடி இதை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இந்த வின்ட் சிம்ஸை வீட்டிலே மேற்கு பக்கத்தில் வைப்பதே சிறந்ததாகும்.

நீலநிற கிரிஸ்டல் தாமரை: இதை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த நீல நிற கிரிஸ்டல் தாமரையை வீட்டின் படுக்கையறையில் தென்மேற்கு பகுதியில் வைப்பதால், மண வாழ்க்கையில் அமைதியும், காதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

டிராகன் சிலை

டிராகன் சிலை: ஜப்பானிய டிராகன் சிலை கையிலே முத்து வைத்திருக்கும். இந்த சிலையை சரியான திசையில் வைத்தால்தான் அதிர்ஷ்டம் கிடைக்கும். அறையை பார்த்துகொண்டிருப்பது போலவே இச்சிலையை வைக்க வேண்டும். வாசலை பார்த்தது போல வைத்தால் பண விரயம் ஏற்படும்.

ஆந்தை சிலை: ஆந்தைகள் அறிவு மற்றும் ஞானத்தை குறிப்பதாகும். இது பாதுகாக்கும் சக்தியாக கருதப்படுகிறது. ஆந்தை சிலையை வீட்டில் சரியான இடத்தில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வீட்டிற்கு வெளியிலே இதை வைப்பதன் மூலம் தீய சக்திகளை விரட்டும். அதுமட்டுமில்லாமல் வீட்டை அலங்கரிக்கும் பொருளாகவும் இருக்கும்.

நம் வீட்டில் எப்போதுமே தேவையில்லாத பொருட்களை வைத்திருந்தால் அகற்றி விடுவது நல்லதாகும். அதிஷ்டம் தரக்கூடிய பொருளாகவே இருந்தாலும் அவற்றை அதிகமாக வீட்டில் வாங்கி வைக்க வேண்டாம். தென்கிழக்கு பகுதி பணம் தரக்கூடிய மூலையாகும் அங்கே வைக்கப்படும் பொருட்களில் அதிக கவனம் தேவை. இதையெல்லாம் சரியாக வாஸ்துப்படி செய்தால் அதிஷ்டம், மனநிம்மதி, வளர்ச்சி, செல்வச்செழிப்பு என்று அனைத்துமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

SCROLL FOR NEXT