'Education is the key to success in life' Sudha Murthy
'Education is the key to success in life' Sudha Murthy https://starsunfolded.com
வீடு / குடும்பம்

‘கல்வியே வாழ்வின் வெற்றி திறவுகோல்’ சுதா மூர்த்தி சொல்லும் வாழ்க்கைப் பாடம்!

எஸ்.விஜயலட்சுமி

ந்திய ஐ.டி. துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குவது  ‘இன்போசிஸ்’. இதன் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தற்போது ராஜ்ய சபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். சுதா மூர்த்தி ஒரு சிறந்த சமூக செயல்பாட்டாளரும் கூட. அவரது, 'இங்கு அங்கு மற்றும் எங்கும்' (Here, There and Everywhere) என்ற நூலில் மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவையான 15 வாழ்க்கைப் பாடங்களை பற்றிச் சொல்கிறார். அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கல்வியே வெற்றிக்கான திறவுகோல். ஒருவர் தனது வறுமையின் சுழற்சியை உடைத்து வெற்றியை அடைவதில் கல்வி மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வியின் மூலம் தனது வாழ்க்கையை மாற்றிய பல நபர்களின் கதைகளை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

2. ஒவ்வொரு மனிதனுக்கும் பச்சாதாபமும் இரக்கமும் இன்றியமையாத குணங்கள். மற்றவர்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் இந்த குணங்கள் உதவும். உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த இந்த குணங்களை ஒவ்வொருவரும் அவசியம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வாசகர்களை ஊக்குவிக்கிறார்.

3. மக்கள் பணம், பொருள் போன்ற உலகியல் விஷயங்களில் அதிகமாக பற்று இல்லாமல் எளிய மற்றும் அடக்கமான வாழ்க்கை வாழ வேண்டும். எளிமையும் பணிவுமே உண்மையான நற்பண்புகள். உண்மையான மகிழ்ச்சி மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் இயற்கையின் உடனான தொடர்பிலும்தான் உள்ளது என்கிறார்.

4. பெற்றோர்தான் ஒருவருக்கு முதல் ஆசிரியர்கள். வாழ்க்கையில் எத்தனை சாதனை செய்திருந்தாலும் பெற்றோரிடம் நன்றி மறவாமல் இருப்பது மிகவும் அவசியம். நன்றி உணர்வு ஒரு சக்தி வாய்ந்த உணர்ச்சி. வாழ்க்கையில் பெற்றோர்கள் தங்களுக்கு தந்திருக்கும் ஆசீர்வாதங்களுக்காக நன்றி பாராட்ட வேண்டும். இது அவர்களது வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியை மேம்படுத்தும்.

5. சவால்களை சமாளிப்பதற்கு உறுதியும் விடாமுயற்சியும் மிக முக்கியம். பல்வேறு சவால்களை விடாமுயற்சியுடன் சமாளித்த நபர்களின் கதைகளை இந்தப் புத்தகத்தில் அவர் பகிர்ந்து கொள்கிறார். அனைவரும் உறுதியுடனும் வலிமையுடனும் தங்கள் வாழ்வில் வரும் தடைகளை எதிர்கொண்டு முன்னேற வேண்டும் என்கிறார்.

6. குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுகிறார். குடும்பத்தினரும் நண்பர்களும் வழங்கும் வலிமை மற்றும் ஆதரவு ஒருவரை வாழ்க்கையில் சாதனை புரிய செய்யும்.

7. சமுதாயத்தினால் ஒவ்வொரு மனிதனும் மிகுந்த பலன் அடைகிறார்கள். அதேசமயம் சமுதாயத்திற்கு அவர்கள் திரும்பக் கொடுப்பதை ஒரு உன்னத நோக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உலகில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். திரும்பக் கொடுப்பது மகத்தான மனநிறைவையும் தரும்.

8. வாழ்நாள் முழுவதும் ஒருவர் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி படிப்பைத் தொடர்ந்து அறிவைத் தேடிக் கொண்டும் அதன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டும் இருக்க வேண்டும்.

9. பல்வேறு கலாசாரங்களை மதிக்கும் மனதை எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பன்முகத்தன்மையை தழுவி வெவ்வேறு கண்ணோட்டங்களை மதிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்ற புரிதலை வாசகர்களிடையே ஊக்குவிக்கிறார் சுதா மூர்த்தி.

10. மகிழ்ச்சி என்பது பெரிய பெரிய விஷயங்களில் இல்லை. எளிய விஷயங்களில் கூட ஒருவரால் மகிழ்ச்சியைக் காண முடியும். எளிய இன்பங்களை பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வின் அன்றாட தருணங்களில் மகிழ்ச்சியைக் கண்டு ரசிக்க வேண்டும்.

11. பிறர் மீது சிறிய அளவிலான கருணை செயல்களை செய்ய வேண்டும். அவற்றை ஒருபோதும் குறைவாக மதிப்பிடக் கூடாது. இந்த உலகில் தயை உணர்ச்சியை பரப்பவும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தவும் சிறிய கருணை செயல்களே போதுமானது என்கிறார்.

12. ஒவ்வொருவரும் தன்னுடைய கனவுகளை நம்ப வேண்டும். தன்னுடைய திறமைகளின் மேல் நம்பிக்கை வைத்து கனவுகளை ஆர்வத்துடனும் உறுதியுடனும் செயல்படுத்த வேண்டும்.

13. அச்சங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இலக்குகளை அடைய முனையும்போது எதிர்ப்படும் இன்னல்களை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும்.

14. முயற்சிகளில் தவறுகள் நேர்ந்தால் அவற்றுக்காக வருத்தப்படக்கூடாது. தோல்விகளை காட்டிலும் தவறுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை கற்கும் வாய்ப்புகளைத் தருகின்றன. தங்கள் தவறுகளில் இருந்து புதிய பாடங்களைக் கற்க வேண்டும்.

15. தனது நம்பிக்கை, நேர்மை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் மூலம் இந்த உலகத்தில் நேர்மறையான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாசகர்களை ஊக்குவிக்கிறார் சுதா மூர்த்தி.

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

அவெஞ்சர்ஸ் ரேஞ்சில் உருவாகும் விஜய்யின் GOAT... மாஸ் படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

SCROLL FOR NEXT