வீடு / குடும்பம்

பதி பக்தி!

ஆர்.ராமலட்சுமி

படித்ததில் பிடித்தது

ஓவியம்: பிள்ளை

பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும்போது முதலைகள் தாக்கி இறந்துபோனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகு நேரம் அந்தக் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினான். முதலைகள் அவனை விரட்டத் தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்துவிட்டான். அந்தப் பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்துவிட்டான். வாயெல்லாம் பல்லாக தானிருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். இப்படி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும்போது திடீர்னு தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா? மனைவி அமைதியாக சொன்னாள். அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT