வீடு / குடும்பம்

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள பத்து விஷயங்கள்!

எஸ்.விஜயலட்சுமி

குளிர்காலத்தில் சூரியனின் வெப்பம் குறைவாக இருக்கும்போது பல உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் பத்து விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நெய்: நெய்யை உருக்கி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது மற்றும் உடல் குளிரைத் தாங்க உதவுகிறது.

2. வெல்லம்: குளிர்காலத்தில் செரிமானப் பிரச்னைகள் தலைதூக்கும். வெல்லம், செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. காபி, டீயில் சர்கரைக்குப் பதில் வெல்லம் சேர்க்கலாம்.

3. உலர் பழங்கள்: உலர் பழங்கள் குளிர்காலத்தில் சாப்பிட உகந்த உணவாகும். ஆப்ரிகாட், உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை உடலுக்கு இயற்கையான சூட்டைத் தரும்.

4. மஞ்சள்: மஞ்சள் இரத்தத்தைச் சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீர் செய்து, சருமத்துக்கு சத்துக்களை அளிக்கிறது. பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. இதை சாம்பார், கூட்டு, ரசம், குழம்பு என அனைத்து உணவுகளிலும் சேர்க்கலாம்.

5. துளசி: இருதயம் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.  ஆஸ்துமா, இருமல், சளி மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.

6. இஞ்சி: ஜீரணத்திற்கு உறுதுணையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை இது குணமாக்கும். பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுப்போக்கையும் குணமாக்குகிறது. இஞ்சி டீ வாயுத் தொந்தரவை குறைக்கிறது

7. இலவங்கப் பட்டை: இலவங்கப் பட்டை கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகளை குணமாக்குகிறது. சுடு நீரில் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியையும் ஒரு மேசைக் கரண்டி தேனையும் சேர்த்து குடித்தால் சளி பிரச்னை குணமாகிறது.

8. கடுகு: இருமலைக் கட்டுப்படுத்தி விஷத்தை முறிக்கவல்லது கடுகு. இது ஜீரண கோளாறுகளை சரி செய்வதோடு, ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. விக்கலையும் இது கட்டுப்படுத்தும். இரத்த சுத்திகரிப்புக்கு கடுகு பெரும் உதவி புரிகிறது.

9. ஏலக்காய்: குளிர்காலத்தில் ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்யலாம். 

10. சூடான சூப்கள்: காய்கறிகளுடன் வெள்ளைப்பூண்டு, மிளகுத்தூள், தக்காளி, சேர்த்து சூடான சூப் வகைகள் செய்து குடிப்பது குளிரையும் தாங்க செய்வதோடு, உடலுக்கு வலு சேர்க்கிறது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT