motivation image Image credit - pixabay.com
Motivation

வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தும் 12 விஷயங்கள்!

பொ.பாலாஜிகணேஷ்

1- சத்தமான குரலில் பேசப்படுவதெல்லாம் உண்மை என்றும், மென்மையான குரலில் சொல்லப்படுவது பொய் என்றும் நினைக்காதீர்கள். வலிமையான உண்மைகள் பலவும் மெல்லிய குரலில்தான் வெளிப்படும்.

2- உங்களின் சிறந்த செயலை எல்லோருமே பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். பலரும், தங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்தால்தான் பாராட்டுவார்கள். அப்படிப்பட்ட பாராட்டுகளுக்கு மயங்காதீர்கள்.

3- உங்களை நிறைய பேர் வெறுத்தால், நீங்கள் தவறானவர் என்று அர்த்தமில்லை. உங்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, தாங்கள் நினைத்ததைச் செய்யவைக்க முடியாதபோது சிலர் உங்களை வெறுக்கலாம். அது உங்களின் தவறல்ல!

4- உணர்வுகள் தற்காலிகமானவை, கோபமோ, எரிச்சலோ, அந்த உணர்வின் தாக்கத்தில் நீங்கள் ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அந்த முடிவுகளின் விளைவுகள் நிரந்தரமானவை. எனவே, முடிவுகளைக் கவனமாக எடுங்கள்.

5- ஒய்வெடுக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் ஏதோ ஒரு வேலையில் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஏதேதோ விஷயங்கள் குறித்து யோசித்துக் குழம்ப மாட்டீர்கள். கடந்த காலத் தவறுகளை நினைத்து வருந்த மாட்டீர்கள்.

6- உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் எப்படி எதிர்வினை நிகழ்த்துகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்குத் தொடர்பில்லாத எதை எதையோ நினைத்து நிம்மதியைத் தொலைக்காதீர்கள்.

7- நீங்கள் சொல்லும் அறிவுரைகளை யாரும் பின் பற்றுவதில்லை. நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் குழந்தை களுக்கும், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்ல முன்மாதிரியாக இருங்கள்.

8- ஏதோ ஒரு சூழலில் யாரோ ஒருவருடன் விவாதம் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். அவர் சொல்லும் கருத்தில் உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால், அவர் உங்களின் அன்புக்குரியவர் என்றால், விவாதத்தை தவிர்த்துவிடுங்கள். கருத்துகளைவிட உறவுகள் முக்கியம்.

9- உங்களைப் பற்றி உங்களைவிட நன்றாகஅறிந்தவர் வேறு யாருமில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அடுத்தவர்கள் தீர்மானிக்கக்கூடாது. அதை நீங்கள் முடிவுசெய்யுங்கள்.

10- நீங்கள் செய்யும் நூறு நல்ல விஷயங்களை இந்த உலகம் எளிதில் மறந்துவிடும். ஆனால், ஒற்றைத் தவறை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும். எனவே, செயல்களில் கவனமாக இருங்கள்.

11- நாம் எப்படிப்பட்டவர் என்பதை நாம் வாழு சூழல் முடிவு செய்வதில்லை. நாம் எடுக்கும் முடிவுகளே அதைத் தீர்மானிக்கின்றன. சிறந்த முடிவுகளையே எப்போதும் எடுங்கள்.

12- சில நேரங்களில் எதிர்பாராத பிரச்னைகள், நெருக்கடிகள், துன்பங்கள் நேரலாம். அதற்காக நொந்துகொள்ளவோ, நம்மைச் சபித்துக்கொள்ளவோ தேவையில்லை. எப்போது, எதைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டால் இவை நிகழாது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT