Motivation article Image credit - pixabay
Motivation

சந்தோஷமாக வாழ பழகிக் கொள்வோம்!

பொ.பாலாஜிகணேஷ்

லகில் தோன்றிய கோடானு கோடி ஜீவராசிகளில் ஆறறிவு சிந்திக்கும் மனநிலையில் உள்ள ஒரே இனமான மானிட இனம் உண்மையிலேயே தனக்கு கிடைத்த வாழ்வியலை மகிழ்வுடன் வாழ செய்கிறதா என்றால் சந்தேகமே.

வாழ்வில் எத்தனை பேர் இந்த வாழ்க்கை அற்புதமானது, விந்தையானது, கிடைத்தற்கரியது என்று எண்ணி வாழ்கின்றனர். கணக்கிட்டால் நூற்றில் பத்து பேர் கூட மீதம் ஆகாது. அந்த அளவிற்கு தான் பிறந்ததன் நோக்கத்தை விட்டு விட்டு, நாளைக்கு என்றே பேசி இந்த வாழ்வை வீணடித்து வருகின்றனர்.

இந்த வாழ்வில் நாம் அனைவருமே ஒவ்வொரு பொழுதும் யோசித்து வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அந்தந்த காலத்தில்  அந்தந்த பருவத்திற்கேற்ற வேலையை சரிவர செய்து வந்தாலே நமது வாழ்க்கை பயணம் சுமார் 60 வயதை கடக்கும்போது மிகுந்த அனுபவமும் கிடைக்கும்.

சரியான நேரத்தில் சரியாக தொடங்கும் வேலைகளால் எந்தவித தவறுக்கும் இடம் கிடைக்காது. நாம் செய்யும் செயலில் ஆர்வமும், முழுமனதோடு ஈடுபாடும் கொண்டு இயங்கும்போது அனைத் நிலுமே நன்மைதான். இயங்கும்போது மானிட வாழ்க்கை எல்லா செயல்களிலும் அதிகமான பங்களிப்புடன் நடக்க வேண்டும். பிறப்பும், இறப்பும் மாற்றம் கொள்ளாதது என்றே உலக நீதியை உணர்ந்த யாவரும் அன்றாட வாழ்க்கை சந்தர்ப்பத்தை தவறவிட மாட்டார்கள்.

இதை உணராதவர்கள்தான் வாழ்க்கை இன்பத்தை சரியாக நுகராமல் மற்ற அற்ப விசயங்களுக்காகவே தத்தமது நேரத்தை எல்லாம் செலவழித்து விட்டு பின்பு கடைசி காலத்தில் புலம்பு கின்றனர். ஐயகோ... ? நாம் அப்படி வாழ்ந்து இருக்கலாமோ? இப்படி வாழ்ந்து இருக்கலாமோ?. செய்து இருக்கலாமோ? இதை செய்து இருக்கலாமோ? என்று பலவாறு புலம்புவதில் என்ன இருக்கிறது.

வாழ்வில் பலர் இப்படித்தான் இளமை காலத்தில் செய்ய வேண்டிய சரியான செயல்களை சரியான விதத்தில் செய்யாமல் நாளடைவில் காலம் சென்ற பிறகு வருத்தப்பட்டு புலம்பி வருகின்றனர். இந்த வாழ்வில் இன்று மனிதர்கள் மத்தியில் எல்லா நேரமும் பேசப்படுவது பணம்... பணம்... பணம்தான். பணம் இல்லாவிட்டால் வாழ்வு இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பணமே வாழ்வு அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். பணம் ஒருவரின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. அன்றாட வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் மூலாதாரம்தான். ஆனால், அந்த பணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையில் எல்லாவிதமான மகிழ்வையும் பெற முடியாது.

பணம் படைத்தவன் என்று நினைப்பது முட்டாள்தனம். இக்கரைக்கு அக்கரை பச்சை. இதுதான் வாழ்வின் இலக்கணம். ஆகையால் பணம் என்ற ஒன்றுக்காக நமது அரிதான மானிடவியலை இழந்துவிடக் கூடாது. இந்த வாழ்வில் பணம் ஒரு பொருட்டல்ல. வாழ்க்கை சந்தோசம்தான் முதலிடம்.

சந்தோஷமாக வாழ பழகிக் கொண்டாலே போதும் சகலமும் நம்மிடம் வந்து சேரும். சந்தோசமாக இருப்பதும் இல்லாததும் நம் மனநிலையை பொறுத்ததுதான் ஆகவே மனநிலையை மேம்படுத்துவோம்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT