motivation image Image credit - pixabay.com
Motivation

வாழ்க்கையில் முன்னேற நேர்மறை சிந்தனை (Positive Thinking) அவசியம் தேவை!

வாசுதேவன்

சிந்தனை செய்யாதவர்களே கிடையாது. நல் வழியில் சிந்திக்க பழகிக்கொண்டால், நாளடைவில் நாம் அறியாமலேயே அதன் பலன்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவோம்.

நேர்மறையாக சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் முடியுமென்றால், நம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு தொடங்கவும்.

• வாழ்க்கையில் முன்னேற தேவையான தைரியம் அளிக்கும்.

• உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வழி வகுக்கும்.

• நீங்கள் அறியவேண்டும் என்ற ஆவலை அதிகரிக்க செய்யும்.

• நேர்மறையானவை கண்களில் தென்படும்.

• எதிர்மறை என்பவை கிடையாது. அதற்கு பதிலாக சவால்களை சாதிக்க தூண்டும்.

• அடுத்த கட்டம் உங்களை சந்திக்க காத்துக்கொண்டு இருக்கிறது என்பதை உணரவைக்கும். செயல்பட வைக்கும்.

• நேர்மறையான எண்ணங்கள், சுய உந்து சக்தியாக (self motivating energy factor) வேகம் எடுத்து, இலக்கை அடைய உதவும்.

• பிறரின் சாதனைகளை கண்டு பெருமை கொள்ள வைக்கும். நேர்மறை எண்ணங்களுடன் அணுகுபவர்களின் டிக்க்ஷனரியில், பொறாமை (Jealous) என்ற வார்த்தைக்கு இடமேயிருக்காது.

• அத்தகைய நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்
கொண்டவர்களால், பிறரின் முன்னேற்றம் கண்டு உண்மையாக மகிழவும், அவர்கள் மகிழ்ச்சியில் மனதார பங்கு கொள்ளவும் முடியும், முழுமனதுடன்.

• இவர்களால் எந்த வகை சூழ்நிலையிலும், முடியும் என்ற எண்ணத்துடன்தான் எதிர்கொள்வார்கள்.

• தன்னம்பிக்கை மிக்கவர்களால் பிறரின் நம்பிக்கைக்கு உரியவர்களாக முடியும்.

• நேர்மறை எண்ணங்கள் உடையவர்களின் கண்களுக்கு சந்தர்ப்பங்கள் காணப்படும்.

• இத்தகையவர்களுக்கு தோல்வி, தடங்கல் இல்லை, அது ஒரு கற்றுத்தரும் மேடை என்று அறிவார்கள்.

• நேர்மறை எண்ணங்கள் உடையவர்களால், திடமான மனத்துடன் எத்தகை வகையான பிரச்சனைகளையும் எதிர் நோக்கி, அலசி ஆராயந்து முடிவு எடுத்து செயல்படுத்த முடியும்.

• இவர்கள் வாழ்க்கையில் தயக்கம், பின் வாங்குதல், தடுமாறுவது போன்றவைக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது.

• நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால், தன்னம்பிக்கை தானாக வளருவதை உணரமுடியும்.

• இவர்களுக்கு எத்தகை வகையான முடிவு வந்தாலும், ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செயல்படும் பக்குவம் இருக்கும்.

• நேர்மறை எண்ணங்களை கொள்வதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக் கொண்டு, பலன்களை அனுபவியுங்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT