மங்கையர் மலர்

ஈக்கள் தொல்லையா? அதை விரட்ட சில எளிய வழிகள்!

எஸ்.ராஜம்

* வீட்டில் ஆங்காங்கே புதினா இலைகளை கசக்கி போட்டு வைத்தால் ஈக்கள் பறந்து விடும்.

* தண்ணீரில் சிறிது சமையல் உப்பைக் கரைத்து வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் வராது.

* சிறிதளவு வசம்பை நீர் விட்டு அரைத்து வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் நெருங்காது.

* ஈக்கள் வரும் இடங்களில் கற்பூரத்தை பொடித்து, நல்லெண்ணெய் கலந்து தெளித்தால், ஈக்கள் நெருங்காது. இருந்தாலும் பறந்து விடும்.

* ஆரஞ்சு பழத்தோலை ஒரு துணியில் கட்டி, ஈக்கள் வரும் இடங்களில் வைத்தால், ஈக்களின்தொல்லை நீங்கும்.

* உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும். எரிச்சலூட்டும் ஈக்களை அகற்ற இக் கரைசலை தெளிக்கவும்.

* வீட்டை சுத்தம் செய்வதற்கு கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். கிராம்பின் வாசனையை பொறுக்காத ஈக்கள், அடுத்த நொடியே வீட்டை விட்டு ஓடிவிடும்.

* வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் வீட்டை சுற்றிலும் வைத்திருப்பதன் மூலம், ஈக்கள் வீட்டுக்குள் வருவதை தவிர்க்க முடியும்.

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT