மங்கையர் மலர்

என் வாழ்வில் பூத்த புது மலர்!

முத்துலட்சுமி மோகன்தாஸ்

ங்கையர் மலர்   என் வாழ்வில் பூத்த புதுமலர். என் எழுத்துலகின் வழிகாட்டி எனலாம். என் முதல் கட்டுரையே பரிசுக்குரியதாக பெருமையைப் பெற்றதை என்னென்றுரைப்பது....!


அன்று, பிரசித்திப் பெற்ற தங்க கடற்கரையில் மங்கையர் மலர்   மேடையில் கௌரவிக்கப்பட்டேன்...!
சமீபத்தில் நான் அங்கு சென்றபோது என் நினைவில் மங்கையர் மலரின் ‌நினைவலைகள் முன்னின்று ஆடியதை என்னவென்று சொல்ல...!


மங்கையர் மலர் கொடுத்த ஊக்கத்தில் தொடர்ந்து எழுதலானேன். பல கட்டுரைகள் பிரசுரமானதில், நடுவர் குழுவின் அங்கமானதில் ஆகா....என் உள்ளம் பெருமிதத்தில் பொங்கி வழிந்தது.


கவிதை, கட்டுரைகள், துணுக்குகள் என எழுதியதில் .. .. உறவுகள் மட்டுமின்றி ‌ பலரின் அறிமுகம்  புதிதாக கிடைத்ததில் நட்பு வட்டமும் பெருகியதே...!


வாழ்வில்,  தன்னம்பிக்கை தைரியத்தை மிளிரச் செய்து என் மறுபக்கத்தைக் காட்டியது மங்கையர் மலரே.
இப்போது சொல்லுங்கள்  எனக்கும் மங்கையர் மலருக்கும் உள்ள உறவு நெருக்கமானதுதானே...?

நெஞ்சை உருக்கும் இனிய குரலில் காதலர்களை ஈர்த்த கானம்! 'பூங்கதவே தாள் திறவாய்' புகழ் பாடகி உமா ரமணன் மறைவு: அஞ்சலி!  

முடி வளர்ச்சிக்கு உதவும் வால்நட் ஷெல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

சின்னத்திரையில் வடிவேலு: சம்பளம் 1 கோடியாம்மே!

கோடையில் சூப்பராக ட்ரிப் அடிக்க 10 ஸ்பாட்கள்!

வாடிகன் நகரம்: ஊர் சிறுசு; சுவாரசியம் பெரிசு!

SCROLL FOR NEXT