மங்கையர் மலர்

ஞாபகம் வருதே!

மங்கையர் மலர்

குழவிப் பருவத்தில் எங்களை,

தூக்கியதில்லையே தாங்கள்

எங்கள் இளமேனி வலிக்குமே என!

பின்னலிட்டு ரிப்பன் வைத்து

பள்ளி செல்லும் போது

பாசமுடன் சொல்லும் டாட்டா

ஞாபகம் வருகிறதே!

லுவலகப் பிரிவுபசார விருந்துகளில்

ஒவ்வொரு முறையும்

தாங்கள் உண்ணாது

எங்களுக்காகக் கொணர்ந்த

ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரியை

பங்கிட்டுத் தந்த பாசவுணர்வு

ஞாபகம் வருகிறதே!

ல்ல வாசலில் பஸ் ஸ்டாப்

ஆனால் சிக்கனம் நினைத்து,

நடந்தே அலுவலகம் சென்றது

ஞாபகம் வருகிறதே!

புது மணப்பெண்ணாக

என்னைக் கணவருடன்

பிரியா விடை தருகையில்

சிரித்தவாறு தாங்கள் அழுதது

ஞாபகம் வருகிறதே!

விதிவசமாய் நோய் தாக்க

தீவிர சிகிச்சைப் பிரிவில்

இருக்கையில்

இறுதி நிலையிலும்

புன்னகை செய்த முகம்...

ஞாபகம் வருகிறதே!

ங்கள் பேரிழப்பாய் அப்பா

தாங்கள் இறந்தபோது

வெளியூரிலிருந்த நான் வர இயலாது

வாய்க்கரிசி போட வழியின்றி

நான் துடிதுடித்த தருணங்கள்

ஞாபகம் வருகிறதே!

ப்பா,

அன்பான ஞாபகங்களின்

திரட்டு நீங்கள்!

எண்ணி எண்ணி

அதனை அசைபோடும்

துர்ப்பாக்யக் கன்றுகள் நாங்கள்!

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT