மங்கையர் மலர்

சற்றே காத்திருங்கள்!

எஸ்.விஜயலட்சுமி

நீரில் ஊற வைத்த அரிசியும்

மோரில் நறுக்கிப் போட்ட

வாழைத்தண்டும் காத்திருக்கின்றன

அரைமணியாய் அடுக்களையில்.

ங்களை கொஞ்சம் துலக்கி

சுத்தப்படுத்தேன் என

சமையல் அறை பாத்திரங்கள்

சமிக்ஞை செய்கின்றன.

குவியலாய் கிடக்கின்ற

துவைத்த துணிகள்

மடித்து வைக்கப்பட

என் விரல்களை யாசிக்கின்றன.

கொஞ்சம் பொறுங்களேன் எல்லோரும்!

ன் கற்பனைத் தேவதை

சிறகு விரித்து விட்டாள்.

கதையோ, கட்டுரையோ

கவிதையோ எதுவாகினும்

அவள் விருப்பம் போல

சற்றே இளைப்பாறி வரட்டும்

எழுத்து எனும் ராஜ்ஜியத்தில்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT