தமிழ் சினிமாவின் நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏ-வுமான நடிகை ரோஜா இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது;
ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினேன். ஆந்திராவில் நான் எம்எல்ஏவாக இருக்கும் நகரி தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் மருத்துவ உதவிகளுக்காகச் சென்னைக்குத்தான் அதிகம் வருகிறார்கள். அப்போது சில நேரம் எல்லைப்பகுதிகளில் அனுமதி கிடைப்பதில்லை எனவே எந்தத் தடையுமில்லாமல் அவர்கள் சென்னைக்கு வர உதவி செய்ய வேண்டும் என்றும், ஆந்திரா மற்றும் தமிழ எல்லையில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கி உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைப்பதற்காக வந்தேன். முதல்வர் என்னுடன் பேசும் போது நெடுநாள் பழகியவரைப் போல நட்புரிமையுடன் பேசினார். நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கூறியுள்ளார்.
-இவ்வாறு ரோஜா கூறியுள்ளார். ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியதாகவும் ரோஜா குறிப்பிட்டார்.