செய்திகள்

தமிழக துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

கல்கி டெஸ்க்

தென்கிழக்கு வங்காள விரிகுடாக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை, காட்டுப்பள்ளி, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் புயல் சின்னம் காரணமாக கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க… மீறி குடிச்சா? 

சிலிர்ப்பூட்டும் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா...!

அமரர் கல்கியின்… முத்தான சிறுகதைகள் 10!

ஆஸ்துமா - செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

Rice Keratin: இனி வீட்டிலேயே முடியை ஸ்ட்ரைட் செய்யலாம்!

SCROLL FOR NEXT