செய்திகள்

சென்னையில் கடும் பனிமூட்டம் ! விமான சேவைகள் பாதிப்பு!

கல்கி டெஸ்க்

மார்கழி மாதம் என்பதால் தற்போது கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக இன்று 14 விமானங்கள் தரையிறங்க முடியாமல் அவதியடைந்தன . சென்னையில் நிலவும் கடும் பனியால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மார்கழி மாதம் என்பதால் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதேபோல், சென்னை, சீர்காழி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதை சரியாக தெரியவில்லை .

மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் காலை 8 மணிக்கு சென்னை வந்த, மும்பை விமானம் பனிமூட்டம் காரணமாக வானத்தில் வட்டமிட்டது. பின்னர் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.

அதே போல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்கள், பெங்களூரூ, கொல்கத்தா, கோவை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் வானத்தில் வட்டமடித்து அரை மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக தரையிறங்கின.

சென்னையில் இருந்து மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், கொல்கத்தா உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதம் என்பது விமான நிலையங்களுக்கு வந்த பிறகே பயணிகளுக்கு தெரியவந்ததால் அவதிக்குள்ளாகினர்

இந்திய மக்களிடம் கோரிக்கை விடுத்த மாலத்தீவு அமைச்சர்!

6G தொழில்நுட்பம் வந்தால், ஸ்மார்ட் போன்களே இருக்காது… எல்லாம் சிப் தான்! 

டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனை சமநிலையில் வைக்க உதவும் மூலிகைகள்!

இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கா? அப்போ இது உங்களுக்குத் தான்!

சாதாரண நீர் தெரியும்; கனநீர் என்றால் என்னவென்று தெரியுமா?

SCROLL FOR NEXT