பிரதீபா பாட்டீல்
பிரதீபா பாட்டீல்  
செய்திகள்

பிரதீபா பாட்டீல்: இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியின் பயணம்! 

கிரி கணபதி

பிரதீபா பாட்டீல், 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாகி, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு ஊக்கமளித்து வரலாறு படைத்தார். ஒரு சாதாரண பின்னணியில் இருந்து நாட்டின் மிக உயரிய பதவிக்கு வர, அவரது உறுதிப்பாடு, பொது சேவை மற்றும் விடாமுயற்சி போன்றவை சான்றாக அமைந்தன. இப்பதிவில் பிரதீபா பாட்டீலின் வாழ்க்கைப் பயணத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். 

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி: டிசம்பர் 19, 1934ல் மகாராஷ்டிராவின் நாட்கானில் பிறந்த பிரதிபா பாட்டீல், ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தார். அவரது கல்வியின் மீதான ஆர்வம் மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயிலவும், பின்னர் ஜல்கானிலுள்ள மூல்ஜி ஜெதா கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெறவும் வழி வகுத்தது. அவரது கல்வியே, பொது சேவையில் சிறப்பான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைந்தது. 

அரசியல் வாழ்க்கை: பிரதீபா பாட்டீல் 1960களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மகாராஷ்டிரா சட்டமன்றம் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் உட்பட மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். அவரது வாழ்க்கை முழுவதுமே பெண்களின் உரிமைகள், கல்வி மற்றும் சமூக நலனுக்காகவே போராடினர். 

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி: ஜூலை 2007 இல் பிரதீபா பாட்டீல் இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக பதவியேற்றார். இத்தகைய மதிப்பிற்குரிய பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையுடன் வரலாறு படைத்தார். அவரது பதவி காலத்தில் கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அதிகாரம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, வளர்ச்சி மற்றும் சமூக நீதியை ஊக்குவிப்பதற்காக அயராது உழைத்து, இந்திய நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். 

Symbol of Women Empowerment: பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியானதும் பாலினத் தடைகளை தகர்த்து, இந்தியாவில் பெண்களும் அதிகாரம் பொருந்திய இடத்திற்கு செல்லலாம் என்பதன் அடையாளமாக மாறினார். இதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற பெண்கள் மிகப்பெரிய கனவு காணவும், லட்சியங்களைத் தொடரவும், சமூகக் கட்டுப்பாடுகளை உடைக்கவும் தூண்டுதல் கிடைத்தது. இப்படி, எதிர்கால சந்ததிக்கு முன் உதாரணமாக மாறினார் பிரதீபா பாட்டீல்.   

2012 இல் தனது ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பல்வேறு சமூக முயற்சிகள் மற்றும் பொது சேவைகள் மூலமாக, தன் சேவையைத் தொடர்ந்து செயல்படுத்திய அவர், பெண்களின் வாழ்விலும், குறிப்பாக பின் தங்கிய பின்னணியில் உள்ளவர்களின் வாழ்விலும் மாறாத தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் மூலமாக, சாதாரண கிராமத்தில் பிறந்தவர்களும் சிறப்பான இடத்தை அடைய முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT