செய்திகள்

ஒடிஷா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மரணம்!

கல்கி டெஸ்க்

ஒடிசா மாநிலத்தின் எதிர்க்கட்சி துணை தலைவரும், ஒடிசா மாநில பாஜகவின் துணை தலைவருமான பிஷ்ணு சரண் சேத்தி (வயது 61) காலமானார். அவரது மறைவுக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தின் திரிஹரி தொகுதிக்கு உட்பட்ட மங்கராஜ்பூர் கிராமத்தில் வசிப்பவர் பிஷ்ணு சரண் சேத்தி. கடந்த 2000-ம் ஆண்டு பாஜக சார்பில் ஒடிசா சட்டசபை உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 2019-ம் ஆண்டு பத்ரக் மாவட்டத்தின் தாம்நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி துணை

தலைவராக செயல்பட்டதுடன், பாஜகவின் ஒடிசா துணை தலைவர் பதவியையும் வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பு மற்றும் மூளையில் ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளால் 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லேடி கெட்டப்பில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்... வைரலாகும் போட்டோ!

விமர்சனங்களுக்கு இளையராஜா கொடுத்த நச் பதில்... வைரலாகும் வீடியோ!

நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் (Nehru Institute of Mountaineering) வழங்கும் மலையேற்றப் பயிற்சிகள்!

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

SCROLL FOR NEXT