செய்திகள்

பெண் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறிய ஆன்லைன் டெலிவரி பாய் கைது!

கல்கி டெஸ்க்

ஆன்லைனில் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்யும் பெண்களுக்கு பொருள் டெலிவரி செய்யும்போது, அவர்கள் செல் போன் நம்பரை தனியாக குறித்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஆன்லைன் டெலிவரி பாய் ஜோதிராம் பாபுராவ் மன்சுலே. அவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மாலட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயது ஜோதிராம் பாபுராவ் மன்சுலே. இவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் தான் டெலிவரிக்கு செல்லும் வீடுகளில் பெண்கள் ஆர்டர் செய்திருந்தால், அவர்களின் செல்போன் நண்பர்களை தனியே சேகரித்து வைத்து தனது தனிப்பட்ட செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

பின்னர், அவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மாலாட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியும் ஜோதிராம் தொல்லை செய்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல்துறைக்கு புகார் அளிக்கவே, போலிஸார் குற்றச் செயலில் ஈடுபட்ட ஜோதிராமை கைது செய்தனர்.

மேலும் அவரின் செல்போனில் ஆராய்ந்தபோது 25க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்த அவரை போரிவிலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை தற்போது 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

விரைவில் லோகேஷின் LCU ஷார்ட் பிலிம்... எப்போது தெரியுமா?

ரொம்ப tired-ஆ இருக்கு...ஒரு நாள் லீவு கிடைக்குமா?

புதூர் மலைக் கிராமத்திலிருந்து புளிச்சாறு ஏற்றுமதி!

அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!

SCROLL FOR NEXT