Heavy Rain
Heavy Rain  
செய்திகள்

மழையே! மழையே!....கனமழையே!

கல்கி டெஸ்க்

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (செப்.,29 ) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடதமிழக மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Weather

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஜப்பானிய சமுதாயத்தில் மோசமானவைகளாகக் கருதப்படும் 11 விஷயங்கள்!

சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்றுமா ஓடிடி பிளஸ்?

தன்னம்பிக்கை மிகுந்த பெண்களின் தனித்துவமான 7 குணங்கள்!

கவனச் சிதறலைத் தடுக்க உதவும் 9 சூப்பர் உணவுகள்!

மனம் பக்குவம் பெற இந்த 6 வழிகள் போதும்!

SCROLL FOR NEXT