செய்திகள்

மாணவ செல்வங்களுக்கான பேச்சு போட்டி ..பரிசுத்தொகை ரூ.5000/-

கல்கி டெஸ்க்

இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சு போட்டி நடைபெறுகிறது.

அதன்படி இன்று அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இப்போட்டிகள் நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.5000/- ,இரண்டாவது பரிசாக ரூ. 3000/-, மூன்றாவது பரிசாக ரூ.2000/- வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கென சிறப்பு பரிசாக ரூ. 2000 /- என தலா இரு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் சீரிய கருத்துக்களையும் , சமூக சிந்தனைகளையும் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களின் பிறந்தநாளன்று பேச்சுப்போட்டிகள் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழ்வளர்ச்சித் துறையின் மான்ய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி செப்.15 இன்றும், செப்.17 ஆம் தேதி வரும் தந்தை பெரியாரின் பிறந்த தினமன்றும் இப்பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

ஆர்வமுள்ள மாணவர்கள் செப்.15 மற்றும் செப்.17 ஆம் தேதிகளில் இப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் , சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

SCROLL FOR NEXT