ஸ்டாலின் - அண்ணாமலை
ஸ்டாலின் - அண்ணாமலை 
செய்திகள்

சட்டம் ஒழுங்கில் மேற்குவங்கம் போல தமிழ்நாடும் மாற்றப்படுகிறதா : அண்ணாமலை குற்றச்சாட்டு!

க.இப்ராகிம்

மிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், வேங்கை வயல் சம்பவம் நடந்து பல நாட்களாகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் தான் காரணமா? தமிழக முதல்வரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதற்கு எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆளுநர்?

திமுக அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் தான் காரணமா ?தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவதற்கு ஆளுநர் தான் காரணமா? தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் விலைவாசி உயர்விற்கு ஆளுநர் தான் காரணமா? மேலும் மேற்கு வங்கத்தை போன்று தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கும் ஒழுங்கற்ற காட்டை போல திமுக அரசு மாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவின் பல்வேறு கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றி உள்ளார். அப்போது தேவைப்பட்ட ஆளுநர் இப்போது ஏன் தேவைப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT