சித்தார்த்
சித்தார்த் 
செய்திகள்

என் பெற்றோரை இந்தியில் பேச வற்புறுத்தினார்கள்; நடிகர் சித்தார்த்!

கல்கி டெஸ்க்

மதுரை விமான நிலையத்தில்  பாதுகாப்பு படை வீரர்கள் எனது பெற்றோரை இந்தி பேச சொல்லி வற்புறுத்தி காக்க வைத்தனர் என்று நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 -இதுகுறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப் பட்டதாவது;

 மதுரையிலிருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்வதற்காக என் பெற்றோர் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்கள் கொண்டு கைப்பையை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யும்போது, அந்த கைப்பையில் நாணயங்கள் இருந்தது தெரியவந்தது.

அந்த பையிலுள்ள நாணயங்களை அகற்றுமாறு மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் என் பெற்றோரிடம் இந்தியில் கூறியுள்ளனர்.

என் பெற்றோர் தங்களுக்கு இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்து, மேலும் மேலும் இந்தியில் மட்டுமே பேசியதுடன் என் பெற்றோரை 20 நிமிடங்கள் காக்க வைத்தனர்.

 -இவ்வாறு நடிகர் சித்தார்த் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!

வாழ்க்கையில் சாதிக்க ரஷ்ய விஞ்ஞானி கூறும் 8 வழிகள்!

சிறுகதை – பூஞ்சிறகு!

Drumstick Dosa: முருங்கைக்காய் தோசை வித் இஞ்சி சட்னி!

SCROLL FOR NEXT