செய்திகள்

சென்னை சைக்கிள் பேரணி; பிரேக் இல்லாத சைக்கிள் ஓட்டிய மேயர் பிரியா!

கல்கி

சென்னையில் நேற்றிரவு ( மே 29) நடந்த சைக்கிள் பேரணியில் சென்னை மேயர் பிரியா ராஜன் சைக்கிள் ஓட்டிச் சென்றது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிங்காரச் சென்னை நிகழ்வின் ஒரு பகுதியான 'வீதி விழா' நிகழ்ச்சியில் 'பாதுகாப்பான சென்னை' என்ற கருத்தை வலியுறுத்தி, நேற்றிரவு 8 மணி முதல் 9 மணி வரை பெண்கள் சைக்கிள் ஓட்டும் பேரணியை சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் சென்னை மேயர் பிரியா ராஜனும் கலந்து கொண்டார். ஆனால் அவர் ஓட்டி சென்ற சைக்கிளில் பிரேக் இல்லை என்று தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிகாரிகள் பதறினர். இந்நிலையில் மேயர் பிரியா சைக்கிளை மெதுவாக ஓட்டிச் சென்று சமாளித்துக் கொண்டார். இந்த சைக்கிள் பேரணியில் அவருடன் மேலும் அதிகளவிலான பெண்கள் கலந்துகொண்டனர் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

அவெஞ்சர்ஸ் ரேஞ்சில் உருவாகும் விஜய்யின் GOAT... மாஸ் படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

SCROLL FOR NEXT