Oppenheimer
Oppenheimer 
அறிவியல் / தொழில்நுட்பம்

மகாபாரதத்திற்கும் Oppenheimer-க்கும் உள்ள ஒற்றுமை என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க!

நான்சி மலர்

இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசங்களான ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பல புதுமையான தொழில்நுட்பங்களைப் பற்றி விவரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இதுபோன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை பற்றிய அறிவு வந்தது? என்பது இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது.

இதையெல்லாம் முழுமையான கட்டுகதை, கற்பனை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், 500 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த மக்களிடம் சென்று, என்னால் இங்கிருந்து வேறு ஒரு நாட்டில் இருப்பவரிடம் பேச முடியும். அதற்காக நான் இந்த போன் என்னும் கருவியை உபயோகித்தால் போதும் என்று சொன்னால் அவர்களால் அதை ஏற்று கொள்ள முடியாது. அதை அவர்கள் நம்பவும் மாட்டார்கள். அதேபோல தான் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் பொருட்களை பற்றிய முழு அறிவு நமக்கு கிடையாது.

புஸ்பக விமானம் என்று சொல்கிறார்கள். இராவணன் சீதையை புஸ்பக விமானத்தில் கவர்ந்து செல்லும்போது ஜடாயு என்னும் பறவை வந்து இராவணனுடன் சண்டையிடும். அப்படியானால் இராவணன் காலத்திலேயே விமானமானது கண்டுப்பிடித்தாகிவிட்டது. அவர்களுக்கு அந்த அளவு தொழில்நுட்பம் பற்றிய அறிவில்லை என்று நம்மால் சொல்லிவிட முடியாது. அவர்களின் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் அளவு நாம் முன்னேறவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மகாபாரதத்தில் வரும் அஸ்திரங்கள் அழிவிற்கு பயன்படுத்துவது என்பதை நாம் அறிவோம். அந்த அஸ்திரத்தை இன்றைய கால வெடிகுண்டுகளுடன் (Bomb) ஒப்பிட்டுப் பார்க்கலாம். அஸ்திரங்களில் பலவகை உண்டு, நாகாஸ்திரம், பிரமாஸ்திரம், பசுபதாஸ்திரம் என்று அதேபோல வெடிகுண்டுகளிலும் பலவகைகள் உண்டு. அதில் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரத்தை பிரமாஸ்திரம் என்று சொல்வார்கள். அதேபோல மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு அணுகுண்டாகும். இந்த அணுகுண்டிற்கும், பிரம்மாஸ்திரத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

பிரம்மாஸ்திரம் தாக்கும் போது எவ்வளவு பெரிய அழிவை நிகழ்த்தும் என்று மகாபாரதத்தில் கூறப்பட்டது, ஒரு பெரிய நெருப்பு பந்தை உருவாக்கும், அனல்காற்று, இடிஇடிக்கும் ஓசையுடன் மரம், கடல் அனைத்தும் அதிர்ந்து போகும். 12 பிரம யுகத்திற்கு ஒரு புல் கூட முளைக்காது என்று விவரித்துள்ளனர்.

இது அப்படியே ஜப்பானில் நடந்த அணுகுண்டு வெடிப்புடன் பொருந்துகிறதல்லவா?

மகாபாரதத்தில் பிரமாஸ்திரத்தை பிரயோகப்படுத்த சில மந்திரங்கள் உண்டு. அதை சொன்னால் மட்டுமே பிரம்மாஸ்திரம் செயல்படும். அதுவும் சில குறிப்பிட்ட பேரால் மட்டுமே பயன்படுத்த முடியும். துரோணர், அர்ஜூனர், அஸ்வதாமன், கிருஷ்ணர் போன்றவர்கள் மட்டுமே பிரமாஸ்திரத்தை பிரயோகிக்க முடியும். அதேபோல, அணுகுண்டைப் பயன்படுத்த Password இருக்கும். அதை பயன்படுத்தியே அணுக்குண்டை செயல்பட வைக்க முடியும். அதுவும் அதை பயன்படுத்தக்கூடிய அனுமதி சில பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்பன்ஹெய்மர் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர், ஹிரோசிமா மற்றும் நாகசாகியில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் போவதற்கு காரணமான அணுகுண்டைத் தயாரித்தவர். அவருக்கு மகாபாரதத்தில் வரும் பகவத்கீதையின் மீது ஆர்வம் வந்தது. அதில் அர்ஜூனன் கௌரவர்களுக்கு எதிராக சண்டைப்போட மறுத்தபோது, ‘உன்னுடைய கடமையை செய்’ என்று அர்ஜூனருக்கு கிருஷ்ணர் வாழ்வின் சாராம்சத்தை உபதேசித்திருப்பார். அதேபோல தான் ஓப்பன்ஹெய்ம்மர் அணுகுண்டை கண்டுப்பிடித்தது விஞ்ஞானியாக அவருடைய கடமை. அதைப் பயன்படுத்தியவர்களே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கிறார்கள் என்று கூறினார்.

ஓப்பன்ஹெய்மருக்கும் அர்ஜூனனுக்கும் உள்ள பொருத்தமும் அணுகுண்டிற்கும், பிரம்மாஸ்திரத்திற்கும் உள்ள பொருத்தமும் உண்மையிலேயே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT