அறிவியல் / தொழில்நுட்பம்

இந்திய அரசாங்கத்தின் புதிய இலவச Ai கோர்ஸ் அறிமுகம்.

கிரி கணபதி

Ai தொழில்நுட்பம் பற்றி கற்றுக்கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா, அதுவும் இலவசமாக? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குதான். இந்திய அரசாங்கம் இளைஞர்களுக்காக புதிய இலவச Ai கோர்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசாங்கம் இலவச செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வகுப்புகள் அனைத்துமே முற்றிலுமாக ஏஐ தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாகும். GUVI என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த கோர்ஸை உருவாக்கியுள்ளது. NCVET மற்றும் ஐஐடி மெட்ராஸினால் இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் ஏஐ நெறிமுறைகள் போன்றவற்றை இந்த கோர்ஸ் உள்ளடக்கியுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில் இணைவதற்கு முந்தைய அனுபவம் எதுவும் தேவையில்லை. 

சிலர் Ai பற்றி படிக்க எனக்கு கோடிங் தெரிய வேண்டுமே என நினைக்கலாம். ஆனால் இந்தப் பாடத்திட்டத்தில் சேர எதையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாராளமாக ஏஐ கோர்ஸில் பங்கு பெறலாம். ஏஐ டெக்னாலஜி பற்றி அனைத்தையும் அறிய விரும்பும் நபர்களுக்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் பல மொழிகளிலும் அணுகக் கிடைக்கிறது. 

ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஏஎம் அகமதாபாத் ஆகியவற்றால் நிறுவப்பட்டதுதான் GUVI என்ற Ed-Tech நிறுவனம். இது இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாகும். இவர்கள் ஏற்கனவே அதிக அளவில் ஆன்லைன் கோர்ஸ்களையும், வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றனர். 

இந்நிறுவனத்தின் நோக்கமே இந்தியாவில் எல்லாவிதமான கல்வியையும் அனைவரும் அணுகக் கூடிய வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதாகும். ஒரு நபர் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வருகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், கல்வி அனைவருக்குமே சமமானது, அதைக் கற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதை இந்நிறுவனம் நம்புகிறது. மாணவர்களின் கனவுகளை நிறைவேற்று வதற்கும் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்குவதற்கும் இந்நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள இலவச எஐ கோர்ஸை GUVI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே பதிவு செய்து பாடத்திட்டங்களை நீங்கள் உடனடியாகத் துவங்கலாம். இது முற்றிலும் இலவசம் தான் என்பதால் இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்தைக் கட்டமைக்க உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பப்பாளி இலையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மாமிச உண்ணிகளின் வயிற்றை விட, தாவர உண்ணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன் தெரியுமா? 

முத்து முத்தாக வியர்வை துளிர்க்கும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் அதிசயம்!

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT