ஸ்பெஷல்

50-க்கும் மேற்பட்ட டால்பின்கள்; கன்னியாகுமரி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி பரபரப்பு!

கல்கி

கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் திடீரென 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கி, உயிருக்கு போராடுவதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு போலீசார், மீனவர்களுடன் இணைந்து, டால்பின்களை மீட்டு மீண்டும் கடலுக்குள் அனுப்பினர். இந்நிலையில் ஒரு டால்பின் மட்டும் உயிரிழந்தது.

இயற்கைக்கு மாறான கடல் போக்கு காரணமாக கன்னியாகுமரியில் மேற்கு கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது இதுபோன்று டால்பின்கள் கரை ஒதுங்குவது வழக்கம் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

மதுரையின் விளக்குத்தூண் பற்றி தெரியுமா?

பார்த்திபன் இயக்கும் டீன்ஸ் படத்தின் புதிய அறிவிப்பு!

Safety Tips for Children: குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தர வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்! 

உணவில் சேர்க்க வேண்டிய 9 சிறந்த அல்கலைன் உணவுகள்!

நியூ தக்... கமலின் தக் லைஃப் படத்தில் STR... மாஸ் புரோமோ வைரல்!

SCROLL FOR NEXT