ஸ்பெஷல்

சமையல் எண்ணெய் அதிரடி உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி!

கல்கி

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை அடுத்து சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது:

சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு அடுத்தபடியாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ நல்லெண்ணெய் 240 ரூபாயிலிருந்து 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ டால்டா 120 ரூபாயில் இருந்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சமையல் எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்பதற்கான 3 அறிகுறிகள்! 

உங்களுக்கு ஐஸ் போட்ட ஜூஸ் மட்டுமே குடிக்க பிடிக்குமா?

சிறுகதை – தத்து!

75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண்ணைப் பார்க்க வேண்டுமா? வாருங்கள்!

பண்டைய ரோமானியர்கள் சிறுநீரை இதற்கெல்லாமா பயன்படுத்தினார்கள்?

SCROLL FOR NEXT