ஸ்பெஷல்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

கல்கி

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று  மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் இதுகுறித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது;

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கன்டறியப் பட்டுள்ளது. இம்மாநிலங்களில் கடந்த  2 மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில்,இப்போது மீன்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் தினமும் ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தலைநகர் டெல்லியில் 1.42% என்றிருந்த  கொரோனா பரவல், தற்போது 3.49% ஆக உயர்ந்துள்ளது. எனவே இம்மாநிலங்களில் கொரோனாவை பாதிப்புகளை தீவிரமாக கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

-இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடும் பணிகளை விரிவுப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT