ஸ்பெஷல்

கார்கில் நினைவு நாள்; புதுச்சேரியில் மரியாதை!

கல்கி

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று கார்கில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது

கடந்த 1999 ஜூலை 26-ம் நாளன்று, காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கார்கில் பகுதிகளை இந்திய வீரர்கள் மீண்டும் கைப்பற்றினர்.இந்த போரில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தாலும் 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

இதையடுத்து கார்கில் போரில் இந்திய வீரர்களின் வெற்றி மற்றும் தியாகத்தை கொண்டாடும் வகையில் ஜூலை 26 கார்கில் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  

கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இன்று கார்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இன்று காலையில் இந்த போர் வீரர்கள் நினைவு சின்னத்துக்க்குச் சென்று புதுச்சேரி துணைநிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நெய்யால் மெழுகி கோலமிட்டு வழிபட குழந்தைப் பேறு தரும் அம்பிகை!

இந்தியர்களை அச்சுறுத்தும் DeepFake வீடியோக்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்! 

ஆட்டுப் பண்ணை பராமரிப்பு - சாதித்துக் காட்டிய சதீஷ்குமார்!

கசிந்தது ராமாயணம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

சர்க்கரை நோயை சமாளிப்பது எப்படி? வாழ்நாள் முழுவதும் சிகிச்சை செய்து கொள்ளணுமா?

SCROLL FOR NEXT