ஸ்பெஷல்

விருது நகருக்கு தேசிய விருது!

கல்கி

இந்த வருடத்துக்கான தேசிய MSME விருதுகள் பட்டியலில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய அரசின் "நிடி ஆயோக்" அமைப்பு தெரிவித்ததாவது:

விருது நகர் மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக இம்மாவட்டம்  இவ்வருடத்துக்கான தேசிய MSME விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாட்டில் 112 பின்தங்கிய மாவட்டங்களை நிடி ஆயோக் அமைப்பு தேர்வு செய்து,  அவற்றை முன்னேற்றும் வகையில் கடந்த 2018-ல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இவற்றில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது, விருது நகர் மாவட்டம் தன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக, தேசிய விருது கிடைக்கப் பெற்றது குறிப்பிடத் தக்கது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT