ஸ்பெஷல்

#Breaking: பொறியியல் படிப்புகளில் சேர இனி கணிதம் கட்டாயமில்லை: AICTE அறிவிப்பு!

கல்கி

நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு  ப்ளஸ்-டூ வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டியது இனி  கட்டாயமில்லை என AICTE அறிவித்துள்ளது.

-இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) 2022-23-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்லதாவது:

இந்த கல்வியாண்டு முதல் குறிப்பிட்ட சில வகையான பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு +2 வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. அதேபோல் கணினி அறிவியல், மின்னணு பொறியியல் போன்ற படிப்பில் சேர 12-ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல.

மேலும் குறிப்பாக கட்டிடக்கலை,பயோடெக்னாலஜி மற்றும் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த புதிய நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.

-இவ்வாறு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE)  அறிவித்துள்ளது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT