சென்னையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் குப்பைகளை அகற்றாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 15 மண்டலங்களில் தினமும் குப்பைகளை சேகரிப்பதற்காக 14216 காம்பேக்டர் குப்பை தொட்டிகள், அவற்றை அகற்ற 261 காம்பேக்டர் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது.
மேலும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சென்னை மாநகராட்சி மூலம் நேரடியாக திடக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் திடக் கழிவை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.