ஸ்பெஷல்

புனித கங்கையில் நீராடினார் பிரதமர் மோடி!

கல்கி

காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பு செய்து முடிக்கப்பட்ட நிலையில் அக்கோயில் வளாகத்தைத் திறந்து வைக்க உத்தர பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, கங்கை நதிக்கரையில் புனித நீராடினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் வளாகம் 800 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக உ.பி., சென்ற அவரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். இதனைத்தொடர்ந்து படகில் சென்ற அவர், கங்கை நதியில் புனித நீராடினார்.
Aranmanai 4 movie review in tamil

விமர்சனம் - அரண்மனை 4 - இது 'பழைய பல்லவி பாடும்' பேய் இல்லை… அதுக்கும் மேல! 

சம்மரில் உங்க காரை பராமரிக்க நச்சுனு சில டிப்ஸ்! 

'ஸிர்கேவாலே பியாஸ்'ஸிலிருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!

ஏழைகளின் மலைப் பிரதேசம்... கல்வராயன் மலை..!

எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள சுஜாதா கூறிய எளிய வழிகள்!

SCROLL FOR NEXT