ஸ்பெஷல்

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலானவை: சுகாதாரத் துறை செயலர்!

கல்கி

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் பருவ கால நோய்களான டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.

இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பிஒய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

மாவட்ட ஆட்சியர்கள் ததம் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; மழை காலங்களில் ஏற்படும் டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும்; நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்

இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT