ஸ்பெஷல்

தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்: அரசு அறிவிப்பு!

கல்கி

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் இன்று அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

தமிழகத்தில் பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். மேலும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். மேலும் தமிழக பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.

-இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி சட்டப்படி குற்றமில்லை! ஆனால்... ஆபத்தானது!

'காளி மிர்ச்' மூலிகை விதையிலிருக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் இந்தியர்கள் கைது!

“அல்லாவின் ஆண்டிற்குள் இந்தியா துண்டு துண்டாக உடையும்” – பாகிஸ்தான் முன்னாள் செனட்டர்!

வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT